Latest News

September 02, 2015

மத்தளயில் பதற்றம்!
by Unknown - 0

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை நெற் களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தள விமான நிலையத்தை இன்று புதன்கிழமை (02) காலை சென்றடைந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் மாத்திரம் 20 கோடி ரூபா பெறுமதியான எக்ஸ்ரே ஸ்கேனிங் இயந்திரங்களும், தொழில்நுட்பத் திறன்மிக்க தீயணைப்பு கருவிகளும், 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஏ.சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கு 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்கும் வகையில் பயன்படுத்தாதீர்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments