சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுற்கான பாராளுமன்றத் தேர்தலில் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் ஜனநாயக சோசலிச கட்சியின் சார்பில்பேர்ண் மாநிலத்தில் வேட்பாளரகக் களமிறங்கியுள்ளார்.
சிறந்த குடும்பத் தலைவியாகவும் அன்புத் தாயாகவும் பல்வேறு பொறுப்புகளுக்கும் மத்தியில் மக்கள் சேவையே மகேசன் சேவையேன துணிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருவதுடன் இந்துமதம் கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் பணியற்றிவருகின்றார்.
பிரிந்தானியாவில் கணக்கியலாளராக பட்டம்பெற்ற இவர் பிரத்தியேகமாக தொழில் புரிபவர் என்பதுடன் பகுதிநேர தொழிலாக கன்டோன் தமிழ் மக்களின் பொலீஸ் மொழிபெயர்ப்பாளராகவும் சிவில் மற்றும்உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணியற்றுபவர் சுவிஸ்பிள்ளைகளுக்கு இந்துமதம் தொடர்பான விளக்கங்களையும் இவர் வழங்கி வருபவர் இவரது அர்ப்பணிப்பு மிகுந்த சமூகப் பணிகளால் இவர் பல்வேறு தரப்புக்களின் பாராட்டுதல்களையும் பெற்றவர்.
அத்துடன் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரைக்கும் ஆசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகவும் தமிழ் மக்கள் உட்பட்ட ஆசிய பிராந்திய மக்களுக்கான ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர்களுள் ஒருவராக பணியற்றுபவர்.
இத்தகைய சமூக அக்கறைமிக்க திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் இம்முறை சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடுகின்றார். இவரது அரசியல் ரீதியாக குறிக்கோள்களாக சமவாய்ப்பு சமஉரிமை கலாசார குடும்ப மற்றும் கல்வி வளஊக்குவிப்பு மனித உரிமை, ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணை போன்றவை அமைகின்றன.
திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் ஈழதமிழ் மக்களின் அவலங்களை நன்கறிந்து அவர்களுக்காக குரல்கொடுப்பதில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருபவர் மனிதநேயமுள்ள மக்களின் குரலாகவும் ஈழத்தமிழர்களின் குரலாகவும் அரசியலில் கால்பதித்துள்ள தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை வெற்றிபெறச் செய்ய அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியற்றுவோம்
திருமதி தர்சிகா கிருஷ்ணானந்தம் அவர்களை சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முதல் தமிழ் பிரதிநியாக தெரிவுசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவினை நல்குவோம்
No comments
Post a Comment