Latest News

August 25, 2015

சினிமாத்துறையினருக்கு எதிராக மிக வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் கவனயீர்ப்பு போராட்டம்!!!
by admin - 0



21-08-2015 அன்று காலையில் வள்ளுவர் கோட்டப்பகுதியில் எமது இயக்கம் செயல்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அணி அணியாக திரண்டு வந்த எமது இயக்க தோழர்கள் 10 மணியளவில் ஒன்று கூடினர் அதன் பிறகு போராட்டத்தை ஆரம்பிக்க எமக்கு காவல்துறையால் ஒரு மணி நேரங்களே ஒதுக்கி தரப்பட்டது.
kavinthan

பின்னர் எமது கவனயீர்ப்பு போராட்டத்தை தோழர் மகேசு தானுமூர்த்தி தலைமை தாங்கி மிக நேர்த்தியாக நடாத்தி சென்றார். காவல் துறையால் குறித்த மணிநேரத்தில் நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்போடு எமது தோழர்கள் விரைந்து செயல்பட்டு மக்கள் மத்தியில் இந்த போராட்டத்தை எடுத்து செல்லும் விதமாக கைப்பிரதிகள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கியும் கைப்பிரதிகள் கொடுத்தும் தங்கள் போராட்டத்தை சிற்ப்பாக செய்து முடித்திருந்தர்கள்.

இந்த போராட்தில் தோழர் மகேசு தானுமூர்திக்கு உதவியாக செயல்பட்ட தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் கடலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் பிரபாகரன் மற்றும் தோழர்களான வெங்கடேஸ் போன்றோரும் தோழர்களை சரியான முறையில் ஒழுங்கு படுத்துவதில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தார்கள்.

இதே வேளையில் இந்த போராத்தை குறித்து கேட்டறிந்த பொதுமக்களும் தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். சினிமாத்துறையினருக்கு எதிராக தமிழகத்தில் முதன் முறையாக தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரே இப்போராட்டத்தை சரியான முறையில் கையில் எடுத்திருப்பதாகவும் மது ஒழிப்புக்கும் சமூகசீர்கேட்டை திருத்துவதற்கும் இதுவே சிறந்த முறையென்றும் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். மேலும் சிலர் இப்போராட்டத்தை மாவட்டங்கள்தோறும் செய்யும் படியும் இளைஞர்களை சரியான பாதைக்கு இட்டு செல்லும்படியும் மக்கள் தங்கள் வேண்டுகோளையும் தோழர்களிடம் தெரிவித்துக்கொண்டனர்.

மக்களிக்களின் இந்த கோரிக்கையை அடுத்து தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் தலைமை பரமசாமி ஜோன்சன் அவர்களினால் விடப்பட்ட செய்தி குறிப்பில் எமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சினிமாத்துறையினருக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் வெற்றியடைய உழைத்த ஒவ்வொரு இயக்க உறுப்பினர்களுக்கும் மற்றும் தலைமையேற்று செயல்ப்பட்ட தோழர் மகேசு தானுமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் இந்த போராட்டம் வெற்றியடைய எமக்கு ஊக்கமளித்த ஏனைய தமிழ் தேசியவாதிகளுக்கும் தமிழ் தேசிய அமைப்புக்கள் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு மக்களின் ஆணைக்கேற்ப இப்போராட்டத்தை மாவட்டங்கள் தோறும் எமது அமைப்பினால் செய்ய திட்ட மிட்டுள்ளோம் என்பதையும் மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி வணக்கம்
தமிழ் இளைஞர் ஒன்றியம்
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!









« PREV
NEXT »

No comments