Latest News

August 17, 2015

தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் இலங்கை தேர்தல் குறித்த அறிக்கை!!!
by admin - 0

united tamil youth
அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது வணக்கங்கள்
நாளை 17-08-2015 திங்கட்கிழமை இலங்கையில் நடைபெற உள்ள 17வது நாடாளுமன்ற தேர்தல் குறித்த எமது அறிக்கை நாம் இது குறித்த எமது நிலைப்பாட்டை ஏற்கனவே சமகால அரசியல் என்ற எமது அறிக்கையில் வெளியிட்டிருந்தோம்.

எனவே நாளை தமிழர் பிரதேசங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் வடக்கு கிழக்கை சேர்ந்த அனைத்து மக்களும் அணிஅணியாக சென்று உங்கள் வாக்கு உரிமையை உறுதிசெய்து கொள்ளுங்கள். யாரும் இந்த தேர்தலையும் உங்கள் உரிமையையும் அசட்டை செய்யாதீர்கள். தற்போது உங்களுக்கு சிங்களதேசம் விட்டு வைத்திருக்கும் ஒரு உரிமை வாக்குரிமை மட்டுமே இதனையும் நாம் அசட்டை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இதனையும் எம்மிடமிருந்து சிங்கள தேசம் பறித்துவிடும் நிலைக்கு நாம் இடமளிக்க கூடாது. இந்த உரிமையை சரியாக பயன்படுத்தி எமது சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க முற்படுவோம்.

உங்களிடமிருக்கும் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக தற்போது வாக்கு மட்டுமே உள்ளது. ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் நாளை அணி திரண்டு உங்களை ஏமாற்றிய தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வடக்கு கிழக்கில் ஓர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்தேசிய உரிமையை எமக்கு பெற்று தரக்கூடிய உண்மையான மக்கள் தலைவர்களை தெரிந்தெடுக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!
« PREV
NEXT »

No comments