Latest News

August 01, 2015

தமிழ்தேசிய முன்ணனிக்கு பெருகும் ஆதரவு -வேட்பாளர்களை இடைநிறுத்த கூட்டமைப்பு பிரயத்தனம் TNA TNPF
by admin - 0

திருகோணமலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஆதரவு பெருகிவருவதை அடுத்து அச்சமடைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்கள் சிலர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களை தேர்தலில் இருந்து இடைநிறுத்த பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

கூட்டமைப்பில் தீவிர ஆதரவாளரான திருச்செல்வம் நேற்று(31-07-2015) இரவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் தம்பலகாம பகுதி வேட்பாளர் கந்தசாமி சந்திரகுமாரின் வீட்டுக்கு சென்று பொதுத்தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளதோடு இலட்சக்கணக்கான பணம்; மற்றும் வாகனம் தரலாம் இத் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியுள்ளனர். 

இருந்தும் எந்த வித வற்புறுத்தல்களுக்கும் அஞ்சாமல்  தமிழ் மக்களுக்கான மாற்றத்தின் தேவையை  கருத்தில் கொண்டும் மேற்கூறப்பட்ட சலுகைகளை தட்டிக்கழித்தும் அங்கே சென்ற கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தேவையை கூறி அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments