ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வந்த எனது பெறுமதியை விளங்காது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்னைக் கைவிட்டமை, அக்கட்சி செய்த தவறாகவே நான் காண்கின்றேன் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழங்கியமை நீதியற்ற ஒரு செயல். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தவை.
நான் ஒரு அரசியல்வாதி. எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடவே எதிர்பார்த்துள்ளேன். தற்பொழுது நான் சில நாட்களுக்கு ஓய்வெடுக்கவுள்ளேன் எனவும் அவர் மேலும் கூறினார்.
No comments
Post a Comment