Latest News

August 11, 2015

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் அவுஸ்றேலியாவின் செனற்ரர் லீ றிஆனோ !
by admin - 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் அவுஸ்றேலியாவின் செனற்ரர் லீ றிஆனோ !
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயகத்தில் அவுஸ்றேலியாவின் பசுமைக்கட்சிப் பிரதியான செனற்ரர் லீ றிஆனோ அவர்கள் இணைந்துள்ளார்.
நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுற்றாடல் மற்றும் சமூக நீதிக்காக இயங்கி வரும் செனற்ரர் லீ றிஆனோ அவர்கள், மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கொண்டதோடு தனது ருவிற்றல் தளத்திலும் ஒப்பமிட பகிர்ந்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் கையெழுத்து இயக்கம், 13 இலட்சங்களைக் கடந்து செப்ரெம்பர் வரை நீடித்துச் செல்கின்றது.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செம்ரெம்பர் மாத அமர்வில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அறிக்கையின் பரிந்துரையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் மில்லியன் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது


« PREV
NEXT »

No comments