Latest News

August 29, 2015

புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான செயற்பாடு புலம்பெயர் அமைப்புகளால் ஆரம்பம்!
by Unknown - 0

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து தனிநாட்டுக்கான போராட்டத்தை புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் முன்கொண்டு செல்வதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கைச் செய்திகளை வழங்கும் தனியார் செய்திச் சேவை நிறுவனமான கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவையின் இணையத்தளத்தில் மேற்கண்ட செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளை அமைப்புகள் ஒன்றிணைந்து தனிநாட்டுக்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் அழிவு மற்றும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை போன்ற விடயங்களும் இந்தக் கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விடுதலைப் புலிகளை மாவீரர்களாக சித்தரிப்பதுடன், தமிழின விடுதலைப்போராட்டத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் ஈழம் வரைபடம், தேசியக் கொடி, யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் என்பனவும் கண்காட்சிகளின் போது விற்பனை செய்யப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments