ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று இராஜினாமா செய்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்த தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிடம் அனுப்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பொதுத் தேர்லுக்கு முன்னர் சுசில் பிரேமஜயந்தவை முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்தும் அநுர பிரியதர்ஷன யாப்பாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் குறித்த பங்கு கட்சிகள் ஒழுங்காக உண்மைகளை புரிந்துகொள்ளாமல் மக்களை தவறாக வழிநடத்தும் வடிவத்தில் செயற்படுத்துவது குறித்து தான் வருத்தமடைவதாகவும் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment