Latest News

August 05, 2015

லலித் மோடிக்கு பிணை பெற முடியாத பிடியாணை!
by Unknown - 0

இந்தியாவின் விசேட நீதிமன்றம் ஒன்று பிணை பெற முடியாத பிடியாணையை இந்தியன் பிரீமியர் லீக்கின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக விடுத்துள்ளது. 

அவருக்கு எதிராக சுமத்தப்படடுள்ள பணச்சலவை குற்றச்சாட்டுக்காக இந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் அமுலாக்கல் பிரிவினால், லலித் மோடிக்கு எதிராக பிடிவிராந்தை பிறப்பிக்குமாறு விசேட நீதிமன்றத்திடம் கோரி இருந்தது. 

எனினும் லலித் மோடியின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் அழைப்பாணைகளுக்கு எந்த பதிலும் வழங்கி இருக்கவில்லை.

இந்த நிலையில் அவருக்கு எதிராக பிணை கோர முடியாத பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments