Latest News

August 26, 2015

அடுத்த 2 வருடங்களில் மீண்டும் ஆட்சி மாறும்-விதுர சூளுரை
by Unknown - 0

அடுத்துவரும் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் வெட்கமில்லாது ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் அமைக்கப் போகிறார். ஆனால், இக்கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு வெட்கம் இருக்கின்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி, மாகாண சபைத் தேர்தல்களில் எமது பலத்தை நிரூபித்து, அடுத்து வரும் இரு வருடங்களுக்குள் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவோம் எனவும் அவர் மேலும் சூளுரைத்தார். 
« PREV
NEXT »

No comments