Latest News

August 24, 2015

ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும் - கருத்தரங்கம்
by admin - 0

நேற்று 22-8-2015 ’ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும்’ என்ற தலைபில் சென்னை செ.தெ நாயகம் பள்ளியில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்
இனப்படுகொலை இலங்கையும் இந்தியாவின் வர்த்தகமும் என்ற தலைப்பில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவிணும்,
ஈழத்தை அழிக்கும் சர்வதேச சதிகள் என்ற தலைப்பில் மே 17 இயக்க தோழர் கொண்டலும்,
ஈழமும் நம் கடமையும் என்ற தலைப்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும் உரையாற்றினார்கள்.
மேலும் இதில் ஈழத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து ஐநாவில் அறிக்கை தாக்கல் செய்த தமிழக தோழர் கயல் என்ற அங்கயற்கண்ணி அவர்கள் ஐநாவில் தற்போதைய நிலவரம் குறித்தும் பேசினார்கள்.
இந்த நிகழ்வில் தமீழீழ வடக்குமாகாண முன்னாள் பிரதிநிதி தோழர் ஆனந்தி சசீதரன், தமிழ்தேசிய நடுவத்தின் தோழர் பாவேந்தன்,தமிழ்தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி,திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் வழக்கறிஞர்.அருண், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் மற்றும் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.







« PREV
NEXT »

No comments