எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டம், தேர்தல் வன்முறைகளை அடியொட்டியே ஜனாதிபதியின் உரை அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அனேகமாக, தேர்தல் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு, எதிர்வரும் 15ஆம் திகதியளவில் ஜனாதிபதி இவ்வுரையை மேற்கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments
Post a Comment