இந்த தகவலை சிங்கள பத்திரிகையொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
பிரபாகரன், படையினருக்கு லஞ்சம் வழங்கி தப்பிச் சென்றதாகக் கூறும் அந்த புத்தகத்தை அச்சிடுவதற்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பிரதானியொருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
சில இலத்திரனியல் ஊடகங்களில் பிரபாகரன் என காண்பிக்கப்பட்ட நபர், அவரது உருவத்திற்கு சமமான வேறு நபராகும் என இராணுவப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லியின் த்ரிலோனபூர் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒன்றரை வருடம் தங்கியிருந்தார் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூலை யார் எழுதியது என்பது பற்றிய தகவல்கள் கண்டறியப்படவில்லை.
எவ்வாறெனினும் பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறப்படும் தகவல் வெறும் கட்டுக்கதை என சிரேஸ்ட இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் சிங்களப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment