Latest News

August 18, 2015

தேவானந்தாவுக்கும் ஒரு ஆசனம்!
by Unknown - 0

யாழ். மாவட்டத்தில் இம்முறை 207,577 வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 05 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஈபிடிபி எனும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் விடுதலை முன்னணி இங்கு 30,232 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை இங்கு 20,025 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், 17,309 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய முன்னணிக்கு இம்முறை ஆசனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments