Latest News

August 18, 2015

கலைந்து போன ஜே.வி.பியின் கனவு!
by Unknown - 0

பொதுத் தேர்தலில் குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அந்த கட்சியின் வெற்றிக்காக பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட பிரசாரம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த பிரசாரத்தின் மூலம் பலன் கி்டைக்காத நிலையில், மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தது 30 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தல் முடிவுகளின்படி 7 முதல் 8 ஆசனங்களே கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments