Latest News

August 11, 2015

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குள் பிளவு!
by Unknown - 0

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் வீரர்களுக்கிடையே பிளவு நிலவுவதாக வெளியான செய்தியை அணித்தலைவர் மைக்கல் கிளார்க் மறுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஸ் இன் 5 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஓவலில் வருகின்ற 20 ஆம் திகதி தொடங்குகிறது.

ஆஷஸ் தொடரில் தனது தலைமையில் அவுஸ்திரேலிய அணி 7 டெஸ்டில் தோல்வியை சந்தித்ததாலும், அன்னிய மண்ணில் 13 டெஸ்டில் தோல்வி கண்டதாலும், ஆஷஸ் போட்டி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது தெரிவிக்கப்படுவது போன்று தமது அணி வீரர்களுக்கு இடையே எந்தவிதமான பிளவும் இல்லையென கிளார்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமீபகாலங்களில் கிளார்க்கின் ஆட்டம் சிறப்பானதாக அமையாதமையினாலேயே ஓய்வு பெறம் முடிவை கிளார்க் எடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments