Latest News

August 14, 2015

விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரிந்திருக்கக் கூடிய வெடிச்சம்பவம்-சீனா
by Unknown - 0

சீனாவின் தியாஞின் நகரில் பெரும் அழிவை ஏற்படுத்திய வெடிச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருபத்திநான்கு மணிநேரம் கழிந்த பின்னரும் இன்னமும் கரும் புகை வந்துகொண்டிருக்கிறது.

வடக்கு துறைமுக நகரான அங்கு இரண்டு வெடிச் சம்பவங்கள் நடந்ததில் குறைந்தது ஐம்பது பேராவது பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் பன்னிரண்டு தீயணைப்பு படையினரும் அடங்குவர்.

பல அபாயகரமான பொருட்களை அந்த கிடங்கில் வைத்திருந்ததாக சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் வெடிப்பு நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக, சம்பவ இடத்துக்கு மிக அருகே போவதில் இருந்து தீயணைப்பு படையினர் சற்று தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

« PREV
NEXT »

No comments