Latest News

August 22, 2015

யாழ் கொட்டடி பகுதியில் சடலம் மீட்பு
by admin - 0

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம், சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.


கொட்டடி பகுதியைச் சேர்ந்த பூராசா கஜேந்திரன் (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வாய்க்கால் பாலத்துக்கு அருகில் குறித்த சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/152567#sthash.61eRu3BE.dpuf
« PREV
NEXT »

No comments