விவசாயிகளின் கோரிக்கைகளை மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திரு அன்னா ஹஜாரே அவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 02 தேதி வெள்ளிகிழமை முதல், சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதற்கு தமிழக மக்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்ள தமிழகம் வருகிறார்.
இது சம்பந்தமாக வருகிற செப்டம்பர் மாதம் 21 தேதி திங்கள் கிழமை திரு அன்னா ஹஜாரே அவர்கள் தமிழகத்தில் மன்னார்குடியில் ஒருநாள் போராட்டசபை செய்ய உள்ளார்.
தமிழக மக்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
ரவி கிருஷ்ணமூர்த்தி
அன்னா ஹசாரே இயக்கத்தின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்
No comments
Post a Comment