சர்வதேச விசாரணை இல்லை உள்நாட்டு விசாரணையே அமெரிக்கா தீர்மானம். உலக வல்லரசுகளின் தேவை இலங்கையில் ஆட்சியில் மாற்றமே அதை சிங்களம் தான் தப்பிக்க பயன்படுத்தியது ஆனால் தமிழ் தரப்பு ??
அதெப்படி மகிந்த இருந்தால் சர்வதேச விசாரணை மைத்திரி என்றால் இல்லாமல் போகும்? எதற்காக தமிழர் பாவிக்கப்படுகிறார்கள் என்பது இப்பவும் மக்களுக்கு விளங்கவில்லை என்றால் ....
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment