Latest News

August 31, 2015

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் நெற் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறவுள்ளது!
by Unknown - 0

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் நாளை (01) முதல் நெல் களஞ்சியப்படுத்தவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த போகத்தின் போது களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் நாளை (01) விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பீ திஸாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச தரத்திற்கு அமைவாக விமானங்களை ஏற்றி இறக்கும் வகையிலான சமிஞ்ஞைக் கட்டமைப்புக்களையும் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக 2013 ஆம் ஆண்டு மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் தற்போது பிளய் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான ஒரு விமானம் மாத்திரமே இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றது.

அதன்படி தற்போது எவ்வித பாவனையும் இன்றி காணப்படும் விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் நெல் களஞ்சியப்படுத்த நெற் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
« PREV
NEXT »

No comments