Latest News

August 02, 2015

Are They Alive -பிரித்தானிய தமிழர் பேரவையினால் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!
by Unknown - 0

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, வலியுறித்தி " Are  They  Alive "  எனும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்  "பிரித்தானிய தமிழர் பேரவையினால்" முள்ளிவாய்கால் 6 ஆம் ஆண்டு ((மே 18​) நினைவுதினத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இக் கையெழுத்து போரட்டத்தின் ஒருகட்டமாக இன்று "இல்போர்ட்(Ilford  ) செல்வ விநாயகர்" ஆலயத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களினால் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு  மக்களின் பேராதரவுடன் நடாத்தப்பட்டிருந்தது. 







« PREV
NEXT »

No comments