ரேவடி அணியை 96 ஓட்டங்களால் அபாரமாக வெற்றி கொண்டது தீருவில் அணி ..
FIRST FRESH FOOD LIMITED (LONDON ) இன் அனுசரணையுடன் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 9 நபர் 12 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மாபெரும் சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் 5வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தீருவில் அணி திருக்குமரனின் அரைச்சதத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.
தீருவில் அணி சார்பாக திருக்குமரன் ஆட்டமிழக்காமல் 50,விதுஷன் 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.பந்துவீச்சில் ரேவடி அணி சார்பாக உலகராசா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
143 என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ரேவடி அணி 6.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 46 பெற தீருவில் அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றது.
ரேவடி அணி சார்பாக றொசான் 10 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்..
பந்துவீச்சில் தீருவில் அணி சார்பாக மயூரன் 4 ,சிவா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பிரிவு B இல் 2 போட்டிகளிலும் தோல்வி பெற்ற ரேவடி அணி தொடரில் இருந்து வெளியேற சைனிங்ஸ்,தீருவில் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு நுழைந்துள்ளன...
1விக்கெட்டையும் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்ற தீருவில் அணியின் திருக்குமரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
No comments
Post a Comment