Latest News

August 23, 2015

மாங்குளத்தில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் 14 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு முயற்சி
by admin - 0


முல்லைத்தீவு மாங்குளம் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் இலங்கை வங்கிக்கும் இடையில் படைத் தரப்பை சேர்ந்த இருவரால் சிறுமி மேற்கொள்ளப்படவிருந்த பாலியல் வன்புணர்வு முயற்சி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் பிடிக்கப்பட்ட நிலையில் ஒருவன் தப்பிச்சென்றுள்ளதுடன், மற்றைய நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 

இன்று 2 மணிளவில் மேற்படி பகுதியில் வந்துகொண்டிருந்த 14 வயது நிரம்பிய சிறுமியை வந்த சிவிலில் வந்த இருவர் கையை பிடித்து பற்றைக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளனர். 

இதன்போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்ட இருவரும் முதலில் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். 

பின்னர் அப்பகுதிக்கு இராணுவப் புலனாய்வு பிரிவினர் வந்தபோது அவர்கள் இருவரும் தாங்கள் பொலிசார் என கூறியுள்ளனர். 

அந்த வேளையில் சந்தேக நபரில் ஒருவன் தப்பிச்சென்றுள்ளான். அவனை மக்கள் தற்பொழுது தேடிவருகின்றனர். மற்றை நபர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

« PREV
NEXT »

No comments