Latest News

July 24, 2015

இணையத்தளங்களை முடக்கிவிடும் திட்டம்-மஹிந்தவின் அடுத்த நகர்வு !
by Unknown - 0

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் முக்கிய இணையத்தளங்களை முடக்கிவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குருநாகலையில் அமையப்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லத்தில், ஓய்வு பெற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் உட்பட்ட தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி சார்பு செய்திச் சேவையொன்று தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சந்திரா வாகிஸ்த, கீர்த்தி ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைக்காட்சி, வானொலிகளை விடவும் தனியார் இணையத் தளங்களே மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மஹிந்தவின் குடும்பத்தினருக்கு அவதூறு விளைவித்த அனைத்து இணையத்தளங்களையும் முடக்குவதே முதல் வேலை என ஆவேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments