ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதே ஜனாதிபதியின் திட்டமாக அமைந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மீண்டும் ரணிலை பிரதமராக்கி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதே அந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த தருணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றி வருகின்றார்.
இந்த ஒப்பந்தம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வாசுதேவ நாணயக்கார சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
No comments
Post a Comment