Latest News

July 23, 2015

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர் தமிழ் இளைஞர் ஒன்றியத்தினர்!!
by admin - 0

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர் தமிழ் இளைஞர் ஒன்றியத்தினர்!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித உரிமைகள் கட்சியின் ஏற்பாட்டில் இதன் தலைமை நிர்வாக செயலாளர் திரு .முரளி அவர்களின் முயற்சியினால் தமிழ் நாட்டின் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் நாட்டின் தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஷ் தானு மூர்த்தி மற்றும் தோழர் திவாகர் போன்றோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
இதில் எமது தமிழ் இளைஞர் ஒன்றிய இயக்கம் பற்றியும் இதன் செயல்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் நாம் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மற்றும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம் என்பது பற்றியும் தற்பொழுது நடைபெற்றுவரும் கையெழுத்து சேகரிப்பின் அவசியம் பற்றியும் செய்தியாளர்களுக்கு எடுத்துரைத்தனர்
இந்த செய்தியாளர் சந்திப்பில் மனித உரிமைகள் அரசியல் கட்சி தலைவர் திரு சுரேஸ் கண்ணா அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த மனித உரிமைகள் அரசியல் கட்சி தலைமை நிர்வாக செயலாளர் திரு முரளி அவர்களுக்கு தமிழ் இளைஞர் ஒன்றிய இயக்க தலைமை பரமசாமி ஜோன்சன் அவர்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!



« PREV
NEXT »

No comments