Latest News

July 23, 2015

ஐ.தே.மு.யின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று பிரதமரினால் வெளியீடு!
by Unknown - 0

ஐந்து பிரதான இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஐந்து அம்ச தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

பொருளாதாரம், கல்வி, சுதந்திர நாடு, அடிப்படை வசதிகள் பலப்படுத்தல் மற்றும் ஊழல் அற்ற சமூகம் ஆகிய ஐந்து அம்சங்களைக் கொண்டதாக இது அமையவுள்ளது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் பாரிய அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.

‘உங்களுடைய பிரச்சினைக்கு எங்களுடைய தீர்வு’ என்ற தொனிப் பொருளில் நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.  அதேநேரம்,பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான குறிக்கோள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், நல்லாட்சி குறித்து முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஐ. தே. மு. யின் தேர்தல் விஞ்ஞாபனம் பதிலளிக்கு என ஐ. தே. க. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »

No comments