Latest News

July 28, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்ந்தும் நெருக்கடி!!
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதவாளர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களது நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார்.

அவர்களது குழு சந்திப்புக்களினை அவதானிக்க வந்திருந்த பிரதிநிதிகளிடமே இக்குற்றச்சாட்டை கஜேந்திரன் முன்வைத்துள்ளார். இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவித்துள்ளார்.    நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 முறைப்பாடுகளே உத்தியோக பூர்வமாக கிடைத்துள்ளன.  

இவற்றில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவது தொடர்பிலேயே கிடைத்துள்ளன.    மேலும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்றும் சுமுகமான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments