Latest News

July 23, 2015

பேச்சில் தமிழ்தேசியம் ஆனால் ஶ்ரீலங்காவின் ஒற்றை ஆட்சிக்குள் முடக்க நினைக்கும் கூட்டமைப்பு-மணிவண்ணன்
by admin - 0

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறீலங்கா ஆட்சியாளர்களுடன் இணைந்திருந்து வெளிப் படையாக தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு துணைபோனவர்களை எப்போதும் நிராகரிப்பார்கள். ஆனால் பேச்சில் தமிழ்தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் சிறீலங்காவின் ஒற் றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறது என கேட்பவர்கள் சொல்லN வண்டும் வெளிப்படையான எதிரியை, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அங்கீகாரத்தை பெறாதவர்களை நாம் விமர்சி க்கவேண்டுமா? அல்லது நாம் இரத்தம் சிந்தி, உயிர் விலை கொடுத்து எங்கள் அடிமனதில் பதித்திருக்கும் தாயக ம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை விற்பவர்களை விமர்சிக்கவேண்டுமா?
மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான விஸ்வலிங்க ம் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டும் விமர்சிப்பதன் ஊடாக மற்றய ஈ.பி.டி.பி மற்றும் சிங்கள கட்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றது. 

என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்பேதே அவர்,
மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், ஈ.பி.டி.பியாக இருக் கலாம் கருணா குழுவாக இருக்கலாம், சிங்கள கட்சிகளான ஐ.தே.கட்சியாகவோ, சிறீலங்கா சுதந்திர கட்சியாகவோ இருக்கலாம். அவர்கள் எங்கள் மக்களால் என்றைக்கும் ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கப்போவதில்லை. ஆனால் கட ந்த 60 வருடங்கள் தமிழ் மக்கள் ஜனநாயக வழியிலும், ஆயுதப் போராட்ட வழியிலும்,
செய்யாத தியாகங்கள் இல்லை. இரத்தம் சிந்தியிருக்கிறோம். பல்லாயிரம், பல லட்சம் உயிர்களை தியாகம் செய்திரு க்கின்றோம். பெருமள சொத்துக்களை இழந்து இன்றளவும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இi வ அனைத்தும் எதற்காக? தமிழ் மக்கள் இன்றளவும் தங்கள் மனங்களிலே விதைத்திருக்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை கோட்பாடுகளுக்காகவே என்றால் அதனை யாரும் மறுக்க முடியுமா? ஆனால் கூட்டமைப்பு என்ன செய்தது? நாங்கள் 2010ம் ஆண்டு சொன்னோம் தாயகம், தேசிய ம், சுயநிர்ணயம் அனைத்தும் விட்டயிற்று இந்தியா சொல்வதற்கிணங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு 13ம் திருத்தச் சட்டத்தினை ஆதரித்து இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் முடக்கப்போகின்றது என. அது நடந்தது. 

இதற்குப் பின்னரும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என பேசினார்கள் ஆனால் செய்தது என்ன?

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றார்கள், சிங்கள கொடிi ய சுமந்தார்கள், சிறீலங்காவின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 60 வருடங்கள் சுயத்திற்காக போராடிய ஒரு இனம் உலகத்தில் எங்கள் அளவு தொகை கொ ண்ட எந்தவெரு இனமும் செய்திருக்காத உயிர்கொடையை, தியாகங்களை செய்த
ஒரு இனம். உலகத்தின் மனிதநேயம் கண்களை மூடும்படி ஒரு அழிவை கண்டதன் பின்னரும் எழுந்து தனக்கு சுதந்திரம் வேண்டும் என கேட்ட ஒரு இனத்தை அடையாளமே தெரியமல் அழிப்பதற்கு தமிழ்தேசியத்தை பேசிக் கொண்டு அலைந்து திரியும் இந்த ஓநாய்களை விமர்சிப்பது தவறு அல்லது துரோகம் என்றால் அந்த தவறை அந்த துரோகத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்.

இந்த இனம் 60 வருடங்கள் தனது உள்ளத்தில், உயிரில் சுமந்திருந்த சுதந்திர வேட்கையை கொன்று சவப்பெட் டியில் வைத்து பல ஆணிகளை அறைந்து விட்டார்கள், இப்போது கடைசி ஆணியை அடிப்பதற்கே இந்த தே ர்தலில் ஆணை கேட்கிறார்கள். இதற்கு மேல் மக்கள் தீர்மனித்துக் கொள்ளட்டும் நாம் யாரை விமர்சிப்பது? யா ரை விமர்சிக்க கூடாது? என்பதை என்றார்.
« PREV
NEXT »

No comments