Latest News

July 22, 2015

கொள்கைகளை ஏற்று இயக்கமாக செயற்பட அணிதிரளுங்கள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by admin - 0


தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் நிறைவேற்றிக் கொள்வோம்.



மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்ன ம்பலம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (செவ்வாய்கிழமை) மாலை யாழ்.மணியந்தே hட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே கஜேந்திரகுமார் பொன்ன ம் பலம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்,
குறித்த சந்திப்பின்போது மணியந்தோட்டம் மக்கள் கடந்த 5 வருடங்களில் ஈ.பி.டி.பியின ராலும், தமிழ்தேசிய கூட்டமைப்பினராலும் தாம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் நாங்கள் யாரையும் நம்ப தயாரில்லை. 


எங்கள் பகுதியில் வீதிகள் புனரமைக்கப்படாமலிருக்கின்ற து. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கை இன்னமும் மாறவில்லை. எல்லோரும் வந்து பேசுகிறார்கள் ஆனால் பயனில்லை. என கூறினர். 


இந்நிலையில் இவற்றுக்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாம் பதவிகளை இலக்கு வைத்து நாம் இங்கே வாக்கு கேட்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை 
உன்மையாகவும் நேர்மையாகவும் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நாம் வந்திருக்கிறோம். எம்மை பார்த்து யாரும் வாக்களிக்கவேண்டாம். 


எங்கள் கொள்கை களுக்காக எங்களுடன் இணைந்து ஒரு இயக்கமாக சேர்ந்து இயங்குவதற்று வாருங்க ள் என கஜேந்திரகுமார் மக்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், நாம் ஈ.பி.டி.பியும் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பும் இல்லை.


 

நாங்கள் உங்களுக்கு முன்னால் வருவது இதுவே முதல் சந்தர்ப்பம். இந்நிலையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை க் கொடுங்கள். என கேட்டதுடன், மக்களுக்கள் நீங்கள் வீதிகள் புனரமைப்பு மற்றும் வாழ்வாதார நிலமைகள் தொடர்பாக கேட்டுள்ளீர்கள், நிச்சயமாக அவற்றைப் பெற்றுக் கொடுப்போம். அதனை நாங்கள் தனித்து அல்ல மக் களுடைய முழுமையான ஒத்துழைப்புடன் நாங்கள் இந்த வீதிகள் மற்றும் பிரச்சினைக ளுக்கு தீர்வு காண்போம். நாம் 2010ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் நாம் கெ hள்கை வேறுபாடு காரணமாக நாம் பிரிந்து சென்றதன், பின்னர் நாம் எங்கேயும் ஓடவில்லை. நாங்கள் இங்கேயே இருந்தோம். தமிழ் மக்களின் நிலப்பிரச்சினை, மற்றும் காணாமல்போனவர்கள் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடியிருக்கிறோம். முன்னிலை வகித்து அவ ற்றை ஒழுங்கமைத்திருக்கிறோம். எனவே மக்கள்
எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என கேட்டிருந்தார். இந்நிலையில் மக்கள் தமி ழ்தேசிய மக்கள் முன்னணிக்கே தங்கள் ஆதரவு என கூறியதுடன், நாடாளுமன்ற வேட் பாளர்களான கஜேந்திரகுமார், மற்றும் திருமதி பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி ம ணிவண்ணன் ஆகியோர் கிராமத்திற்கான வீதியை  மக்களோடு இணைந்து பார்வையிட்டனர். 


« PREV
NEXT »

No comments