Latest News

July 22, 2015

பொதுத்தேர்தலில் சந்திரிகா நடுநிலைமை வகிக்கக் கூடும்-நாளை மறுதினம் நாடு திரும்புகிறார்
by Unknown - 0

கிறீஸ் நாட்டுக்கு பிரத்தியேக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, அங்கிருந்து கடந்த வாரம் லண்டன் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தற்போது லண்டனில் தனது புதல்வியோடு தங்கியிருக்கும் சந்திரிகா, நாளை மறுதினம் (22) நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பியவுடன் பொதுத் தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் அவர் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

அனேகமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் எக்கட்சியும் சாராமல் நடுநிலைமை வகிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments