அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஆபிரிக்க சங்கத்தில் உரையாற்றினார்.
எத்தியோப்பியாவின் எடிஸ் அபாபா தலைநகரில் அமைந்துள்ள ஆபிரிக்க சங்க தலைமையகத்தில் அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்போது, ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது எனின், செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீது அரசாங்கத்தை கவிழ்க்கப்போகின்றவர்கள் என அழுத்தம் விடுக்கப்படுகின்றது எனின் அங்கு பெயரளவிற்கே ஜனநாயகம் காணப்படுகின்றது என பரக் ஒபாமா தெரிவித்தார்.
மேலும், தனது பொறுப்புக்கள் மீது தனக்கு பாரியதொரு மரியாதை உள்ளதென குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி, தனது கடமைகளை நேசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மீண்டுமொருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தன்னால் வெற்றிபெற முடியும் என்ற போதும் அரசியலமைப்பின் பிரகாரம் அதனைச் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.
No comments
Post a Comment