Latest News

July 24, 2015

தனக்குப் பொல்லாத கோபம் ஏன் வந்தது-விளக்குகிறார் மஹிந்த
by Unknown - 0

அகுரஸ்ஸ கூட்டத்துக்கு வரும்போது சனக் கூட்டத்துக்கு மத்தியில் மதுபோதையில் இருந்த ஒருவர் எனது விரலை பலமாக அழுத்திப் பிடித்தார். எனது விரலை உடைக்கப்பார்த்தார். இதனால், எனக்குப் பொல்லாத கோபம் வந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சம்பவம் குறித்து அறிவிப்புச் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுக் கூட்டமொன்றில் வைத்து பொது மகன் ஒருவருக்கு அடிப்பதற்கு கை நீட்டிய சம்பவம் வீடியோ காட்சிகளில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது குறித்து சிங்கள தேசிய ஊடகமொன்று அவரிடம் வினவியதற்கே அவர் தொலைபேசியில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நான் உணர்ந்த நோவுக்காக நான் அவரின் கையை தட்டிவிட்டேன். இந்த சம்பவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்த எனக்குத் தேவையில்லை. அவர் மது போதையில் இருந்த ஒருவர்.

இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு இன்று பலரும் பல பேச்சுக்களை கூறிவருகின்றனர். எனக்கு மட்டுமல்ல அவ்வாறு விரலைப் பிடித்தால் யாருக்கும் கோபம் பொத்திக் கொண்டு வரத்தான் செய்யும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 
« PREV
NEXT »

No comments