இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3 மணி முதல் இரவு 8 மணிவரை கலாம் உடல் மக்கள் அஞ்சலிக்காக டில்லியில் வைக்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை ) காலை 7 மணிக்கு டில்லியில் இருந்து உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
மதியம் ஒரு மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் உடல்பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் ( நாளை மறுநாள் ) வியாழக்கிழமை காலை 10 .30 மணியளவில் இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை கலாமின் பேரன் சலீம் உறுதி செய்துள்ளார்.
கலாமை எங்கு அடக்கம் செய்யலாம் என்பது குறித்து கலெக்டர் நந்தகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர் ராமேஸ்வரம் தேக்கரும்பு, தனுஷ்கோடி செல்லும் புதுரோடு, காட்டுப்பள்ளி ஆபில் ஹாபில் தர்கா ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
இதில் ஒரு இடம் அடக்கத்துக்காக தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
No comments
Post a Comment