Latest News

July 01, 2015

யாழிலும் இன்புளுவன்ஸா! நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதி!!
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நூற்றிற்கும்; அதிகமானவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அனுதிக்கப்பட்டிருந்த குழந்தை பிரசவித்த மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந் தாய் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்திருந்தார்.இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் இன்புளுவன்ஸா வைரஸ் நோய் தொற்றுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வருகைதருகின்றனர்.

தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள விடுதிகளில் இந் நோய் தொற்றுக்கு இலக்கான 100 ற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்கள் நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் பொது மக்கள் இந் நோய் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எனினும் இந்நோய் தொடர்பாக 2 வயதிற்கு குறைந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அவதானமாக இருக்குமாறும் யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் பசுபதிராஜா பவானி கேட்டுக் கொண்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments