Latest News

July 21, 2015

ஏறாவூரில் வெள்ளைவான் அட்டகாசம் ஒருவர் கடத்தல்
by admin - 0

ஏறாவூரில் வெள்ளைவான் அட்டகாசம் ஒருவர் கடத்தல்
ஏறாவூர் பிரதான வீதியில், காயர் வீதி சந்தியில் ஒருவர் வேன் ஒன்றில் இன்று (21/07/2015) கடத்தப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று(21/07/2017) இரவு ஏறாவூர் பிரதான வீதியில், காயர் வீதி சந்தியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த வெள்ளை வேன் ஒன்றில் சுமார் பத்து இளைஞர்கள் இருந்து பாட்டு கேட்டபடியும் சத்தம் போட்டுக்கொண்டும் இருந்துள்ளனர்.

இதனை அவதானித்த பக்கத்தில் இருந்த கடைக்காரர் பெருநாள் தினம் என்பதால் சுற்றுலா வந்தவர்களாக இருக்கும் என எண்ணி இதனை கண்டுக்காமல் இருந்துள்ளார்.

அப்போது அங்கு ரீலோட் செய்ய வந்த சுமார் 12 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு பாசிக்குடா வுக்கு வழி கேட்டுள்ளனர். (தமிழில்)

‘எனக்குத் தெரியாது கடையில் கேட்கவும் என கூறிய சிறுவனை வேனுக்குள் இழுத்து செல்ல முற்பட்ட வேளை அச்சிறுவன் சத்தமிட்டபடி அவர்களிடம் இருந்து தப்பி வெளியே பாய்ந்துள்ளான்.

அவ்வேளையில் அந்த இடத்தை கடந்த சுமார் ஐம்பது வயது மதிக்கத்த ஒருவர் என்ன என பார்க்க.. அவரை இழுத்து வேனுக்குள் போட்டுக்கொண்டு சென்று விட்டதாக அச்சிறுவன் சற்றுமுன் ஏறாவூர் பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். ஆனால் அவர் யார் என்ற விபரம் இதுவரை இல்லை. போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட வேன் மட்டக்களப்பு நோக்கி சென்றதாக அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.
குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.இதனால் ஏறாவூரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

« PREV
NEXT »

No comments