Latest News

July 29, 2015

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு
by admin - 0

என் அன்பார்ந்தசகோதரசகோதரிகளே,

நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுது திரும்பி வந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்பு என்ன என்று பலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறு ஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் ஒரே கட்சிக்குள்ளேயே விருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையே முரண்பாடுகள் எழுவது எதிர் பார்க்கப்படுவதொன்றே.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச் சார்பற்று நடு நிலைவகிக்கவில்லையே என்று என் மீதுகுறைபட்டுக் கொண்டனர். நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாகநடந்துகொள்வதாக என்னை விமர்சித்தனர். முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்து கொள்ளவேண்டும் என்றார்கள்.
உண்மையில் இதேமாதிரியான ஒரு நிலை சுமார் 53 வருடங்களுக்குமுன்னர் நான் கொழும்பு சட்டமாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்டது.

ஒருசாரார் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிகொள்ளச் செய்தனர். எனக்கெதிராக வாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகல சட்ட மாணவ மாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்று நடந்துகொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறு என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமது நலவுரித்துக்களை மட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள், கடப்பாடுகள் ஆகியவற்றை உத்தேசித்து சட்டமாணவனாகநான் இருந்தபோதே அத்தருணத்தில் பக்கச் சார்பற்றவனாக நடந்து கொள்வதே எனது கடமை என்று முடிவுசெய்தேன். எனது தலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்கு மத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ, எதுமுறையோ அதையே செய்தேன்.
அதேவிதமான ஒருசூழ்நிலை தற்போது என்னை நாடிவந்துள்ளது.

என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாணமுதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதேஎனதுகருத்து.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒருபிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும். கட்சிகளின் நலனை வி டஎமது மக்களின் நலனும்நலவுரித்துக்களுமே முதன்மைபெறவேண்டும் என்பதுஎனதுகருத்து.
அண்மையில் இங்கிலாந்தில் ஹரோ என்ற இடத்தில் இம் மாதம் 17ந் திகதிபேசும் போதுநான் கூறியதை இங்கு உங்களுக்கு குறித்துக் கூற ஆசைப்படுகின்றேன்.

“ மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

அதனை உணர்ந்துஅவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்குநான் துணையாகநிற்பேன்”என்று கூறினேன்.
போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்தநிலையில் எமதுவடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டுசுமார் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டநிலையில் போருக்குப் பின்னரானசூழலில் மூன்றுமுக்கியசவால்களைநாம் யாவரும் எதிர் நோக்கியுள்ளோம்.

முதலாவதாகபோருக்குப் பின்னரானபுனர்நிர்மாண,மீள்குடியேற்ற,அபிவிருத்திப் பணிகள் எமதுமக்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் அறிந்துஅனுசரித்துமுழுமையானநோக்குடன் நடத்தப்படாமல் தான் தோன்றித் தனமாகஅப்போதைக்கப்போதையவாறுநடைபெற்றுவருவதுமனவருத்தத்தைஅளிக்கின்றது.

இரண்டாவதாகஅரசியல் ரீதியாகநிரந்தரத் தீர்வு இன்னமும் எங்கள் கைகளுக்குப் படாமல் விலகிச் செல்வதாகவே இருக்கக் காண்கின்றோம். மூன்றாவதாகபோரினால் பாதிக்கப்பட்டோருக்குநீதிகிடைப்பதும் சேய்மைப் பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இவ்வாறானஒருசூழலிலேயேநீங்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டிய ஒருகடப்பாட்டில் உள்ளீர்கள். இவ்வாறான சூழலிலே, இங்கிலாந்தில் நான் குறிப்பிட்டதற்கிணங்கவே எமது பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது அத்தியாவசியமென்று எனக்குப்படுகிறது. நான் குறிப்பிட்டசவால்களுக்குமுகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது உங்கள் தலையாயகடமையாக விளங்குகின்றது.

தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காகஒருமனதுடன் அரசியல் ரீதியாகஒத்துழைக்கக் கூடியபிரதிநிதிகளையேநீங்கள் தேர்ந்தெடுத்துஅனுப்பவேண்டும்.

அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார் புதிதாகஅமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்க முன் வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானிய பிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மானியத் தலைவி அன்ஜெலாமேர்கல் அவர்கள் கூறியதுதான் என் நினைவுக்கு வந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் “சிறியகட்சியே எக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது”என்றார் அவர். எனதுசிங்களநண்பருக்குநான் கூறினேன்- அரசியல் ரீதியானஒருநிரந்தரத் தீர்வுஎ மக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று.

இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமதுமக்களின் கோரிக்கைகள்    காற்றோடு காற்றாய்ப் பறந்துவிடுவன. எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புஎன்றகொள்கையின் கீழ் எமதுஅமைச்சர்கள் சுதந்திரம் இழந்துவிடுவார்கள். எமதுமக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிடவேண்டியநிலைவரும் என்றேன்.

மேற்கூறியவைபலஎமதுவடமாகாணமக்களுக்குமட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்றுஎண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவானகருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொருசகாப்தத்தைஉருவாக்கமுன்வந்தனர்.

நல்லாட்சி,நீதி,நியாயம்,சமத்துவம்,சமாதானம்,சகலருக்கும் பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்வைத்து புதியதொரு எதிர்காலத்தைக் கட்டிஎழுப்பமுன்வந்தார்கள். அந்தவாறான மக்களின் அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த வேண்டியகடப்பாடு சகலஅரசியல் வாதிகளுக்கும், சகலநிறுவனத் தலைமைத்துவங்களுக்கும், ஊடகங்களுக்கும், குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றது என்பதைநாங்கள் மறக்கக் கூடாது. தனிப்பட்டமனிதகுழுக்களின் நன்மைகளுக்காகமட்டும் நடந்துகொள்ளாது, மற்றைய மக்கட் கூட்டங்களுக்குக் கெடுதிவிளைவிக்காது, நல்லாட்சியை ஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ் சேர்ந்து அச்சக்திகளுக்குத் துணையாக நிற்பதற்கு வருந்தேர்தலானது களம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாக அமையவேண்டும். அப்படி நடந்து கொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.

எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்த சர்வதேசசமூகமானது துணையாகநிற்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

எனவேஎனதுசதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்று உங்களை வாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்து நாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக! தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக!

“அரசாங்கம் ஒருநம்பிக்கைப் பொறுப்பு. அதன் அலுவலர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பும் அதன் பொறுப்பாளர்களும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளார்கள்” (ஹென்றிக்ளே–மேம்பட்டஅரசியல்வாதியும் சிறந்தஅமெரிக்கப் பேச்சாளரும்)
இறைதுணை உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதாக!
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்












« PREV
NEXT »

No comments