Latest News

July 07, 2015

புலிகள் மீள் உருவாக்கம்-யாழில் ஒருவர் கைது
by admin - 0


முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் நேற்று தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். 

119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கைது செய்யப்பட்டவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன் அவரது வீட்டில் இருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரைபடங்கள், புகைப்படங்கள் என்பவற்றுடன் வங்கிக் கணக்குப் புத்தகங்ளையும் ஶ்ரீலங்கா பொலிஸார் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மகிந்தவை தொடர்ந்து மைத்திரியும் புலிகள் உருவாக்கம் என்ற பெயரில் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments