அவுஸ்ரேலியாவில் நடந்த வாகன விபத்து ஒன்றின்போது இரு இலங்கையர்கள் பலியானதாக அவுஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அவுஸ்ரேலியாவில் நடந்த வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இரு தமிழர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் ட்ராவின் நகரில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 32 மற்றும் 35 வயதானவர்களே பலியாகினர். படுகாயமடைந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பலியானவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை உயிரிழந்தவர்களின் இருவரினது சடலங்களும் டார்வின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் உள்ள கசூரினா கடற்கரையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம், மரம் ஒன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அவுஸ்ரேலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment