Latest News

July 30, 2015

தமிழின மக்களே காலங் காலமாக உங்களுக்கு ஏமாற்றமா? அல்லது மாற்றமா வேண்டும் என்பதனை நீங்கே தீர்மானித்துச் செயற்படுங்கள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by admin - 0

தமிழின மக்களே காலங் காலமாக உங்களுக்கு ஏமாற்றமா? அல்லது மாற்றமா வேண்டும் என்பதனை நீங்கே தீர்மானித்துச் செயற்படுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முண்ணயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சனசமூக நிலையத்தில் அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் மண்ணின் மைந்தருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முதல் அரசியற் பிரச்சனைகள் வரை தமிழினம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாகச் செயற்பட்டு வருகின்றது.

இதனால் கூட்டமைப்பு தொடர்பில் மக்களிடத்தே கடுமையான அதிருப்தி ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறான நிலையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். குறிப்பாக ஏமாற்றப்படுவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றம் இத் தேர்தலின் ஊடாக ஊற்படுத்த வேண்டுமென்றுமு; கேட்டுக் கொண்டார்..




« PREV
NEXT »

No comments