Latest News

July 24, 2015

கூட்டமைப்பின் முதலாவது மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை ஆரம்பம் !
by Unknown - 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளைய தினம் யாழ். மருதனார் மடம் பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் 26ம் திகதி தென்மராட்சி சாவகச்சேரி பகுதியிலும், வடமராட்சியிலும் இந்த மாபெரும் எழுச்சி கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமான இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளன.

எனினும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கொழும்பில் தங்கியிருப்பதாலேயே கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், பின்னர் மாகாணசபை தனியாக ஒரு தேர்தல், பிரச்சாரத்தை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவு மக்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த முதலாவது கூட்டத்திலேயே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments