Latest News

July 26, 2015

சுதந்திரக் கட்சியின் ஐந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளனர்!
by Unknown - 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. . ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பிளவடைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் ஐந்து பேர் இவ்வாறு கட்சியின் மத்திய  செயற்குழுவிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.     

எதிர்வரும் நாட்களில் கூட்டப்பட உள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.     கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்த வாரமளவில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.     

கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபாவினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது. கட்சியின் பொருளாளர் எஸ்.பி நாவீன்ன, எம்.கே.டி.எஸ். குணவர்தன, ராஜித சேனாரட்ன, ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இவ்வாறு கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments