Latest News

July 25, 2015

பிரிட்டனில் ஞாயிறன்றும் மழை நீடிக்கும்
by admin - 0

இங்கிலாந்தில் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, வெள்ளிக்கிழமையன்று பெய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருந்தபோதும் சனிக்கிழமையன்று நல்ல வெயில் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று பெய்த மழையின் காரணமாக லண்டனின் பல சுரங்க ரயில் நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வார இறுதி சுற்றுலாவைத் திட்டமிட்டிருந்த பலரும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டனர்.

தென் கிழக்கு இங்கிலாந்தில் இன்று காலைவரை காற்றும் மழையும் நீடிக்குமென வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. அதற்குப் பிறகு வெயில் அடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக் கிழமையன்று மழை மீண்டும் பெய்ய ஆரம்பிக்கும் என்றாலும் வெள்ளிக்கிழமையைப் போல இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பெரும்பலான பகுதிகளில் ஐந்து முதல் 10 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments