Latest News

July 26, 2015

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக போராடும் மற்றொரு இலங்கையர்!
by Unknown - 0

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவின் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் இரண்டாவது இலங்கையர் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தௌஹீர் அஹமட் தாஜூதீன் என்பவரே இவர் என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இவர், ஏற்கனவே ஜூலை 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான அபு சுராயா சைலானியின் மைத்துனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கண்டி கலேவலையை சேர்ந்தவர். இந்தநிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது இலங்கையரும் கண்டி அலதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அபு சுராயா சைலானி ஜூலை மாதம் 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்டதாக குறித்த அஹமட் தாஜூதீனே தமது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அவரின் முகநூலின் முகத்தகவல்களை பார்த்தபோது அவர் மலேசியாவில் வசிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிரியாவில் இடம்பெற்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக வினவியபோது, அவர் தமது முகநூலில் இருந்து விலகியதுடன், நண்பர்களின் கணக்குகளையும் அழித்து விட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments