Latest News

July 31, 2015

மீண்டும் புலிகள் -திஸ்ஸ
by admin - 0

மீண்டும் புலிகள் -திஸ்ஸ
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பீதியை ஏற்படுத்திய புலிகள் மீளவும் தலைதூக்கி விட்டனரா என்ற பீதி அண்மையில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளுடன் ஏற்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவில் தமிழீழு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த விடயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை இதுவரையில் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்
« PREV
NEXT »

No comments