Latest News

June 13, 2015

புலம்­பெயர் தமி­ழர்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைப்­பது அச்­சு­றுத்தல்- நிமல் சிறி­பா­ல டி சில்வா
by Unknown - 0

புலம்­பெயர் தமி­ழர்­க­ளை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைப்­பது நாட்டிற்கு அச்­சு­றுத்தலாகும் என்­று தெரிவித்த எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா போராடி வென்­றெ­டுத்த சமா­தா­னத்தை மீண்டும் பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்­கவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் முயற்­சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார். 

இதேவேளை லண்டன் மாநாட்­டிலும் புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடந்­துள்­ளது எனவும் அவர் குற்றம் சமத்தியுள்ளார். 

புலம்­பெயர் அமைப்­பு­க­ளு­டனும் புலி அமைப்­பு­க­ளு­டனும் லண்­டனில் இர­க­சிய பேச்­சு­வார்த்­தைகள் நடந்­துள்­ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் உல­க தமிழர் பேரவை முக்­கிய பங்­கினை வகித்­துள்­ளதாக அவர் கூறினார்.

அத்துடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் செய­லா­ளரும் இதில் கலந்­து­கொண்­டுள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் இலக்கு என்­ன­வென்­பது தெளி­வாகத் தெரி­வதாகவும் குறிப்பிட்டார். 

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சர்­வ­தே­சத்தின் தேவைக்கும் புலம்­பெயர் புலி­களின் தேவைக்கும் அமை­யவே நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டது என்ற குற்­றச்­சாட்டை தாம் ஆரம்­பத்தில் இருந்தே முன்­வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதை யாரும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. இப்­போது இவர்­களின் உண்மை நிலைமை என்­ன­வென்­பது வெளிச்­சத்­துக்கு வரு­கின்­றது. இந்த அர­சாங்கம் வடக்கில் பிரி­வினை வாதி­களின் தேவையை நிறை­வேற்றும் வகையில் செயற்­பட்­டு­வ­ரு­வதாகவும் கூறினார். 

இன்னும் சிறி­து­காலத்தில் இந்த அர­சாங்கம் ஆட்­சியில் இருக்­கு­மானால் மீண்டும் ஈழத்­துக்­கான அடித்­தளம் இடப்­படும் என்றும் 
உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும் என்றும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments