Latest News

May 21, 2015

மாணவி வித்தியா பற்றி அவரது ஆசிரியர் எழுதிய உருக்கமான குறிப்பு
by admin - 0

மாணவி வித்தியா பற்றி அவரது ஆசிரியர் எழுதிய உருக்கமான குறிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் ஆசிரியர் ஒருவர் எழுதிய குறிப்பு மனதை பிசைவதாக உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய வித்தியாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத துஷ்யந்தன் துரைராஜா என்ற ஆசிரியர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ள குறிப்பு இது.

வித்யா ................... நினைத்து பார்கிறேன்!

2010 இல், புங்குடுதிவு மஹா வித்யாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி ஒருவர் வந்திருபதாக நான் வகுப்பினுள் நுழைந்ததும ஏக குரலில் கூறினர் என் வகுப்பு மாணவர்கள் . பார்த்தபோது வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த அந்த மாணவி வெருட்சிஉடன் எழுந்து நின்றாள்.பெயரை கேட்ட பொது ,"வித்தியா" என்றாள்.

ஆங்கில பாடம் என்றால் வித்தியா என்றே அந்த வகுப்பு மாணவர்கள் கூறும் அளவுக்கு அவளின் திறமை இருந்தது . ஆங்கிலம் மட்டும்மல்ல எல்லா பாடங்களிலும் திறமை காட்டிய அவளுக்கு கணிதம் மட்டும் சவால் விட்டது .அதில் கவனம் எடு என்று எல்லா ஆசிரியர்களுமே கூறும் பொது அவளின் பதில் "சுட்டுபோட்டாலும் வராது சேர் ".

எதிர் கால இலட்சியம் பற்றி ஆங்கிலத்தில் ஒருமுறை நான் எழுத சொன்னபோது தான் ஒரு பத்திரிகையாளராக வருவதே நோக்கம் என்று எழுதி இருந்தாள்.உயர் தரத்தில் கூட அந்த துறையை தான் ஒரு பாடமாக அவள் தெரிவு செய்து படித்தாள்.

ஜனாதிபதி செயலணி குழுவின் ஆங்கில பாட இறுவட்டுகள் கொழும்பில் வைத்து வழங்கப்பட போது எம் பாடசாலை தரப்பில் இவளை தெரிவு செய்தபோது ஆங்கிலத்தில் கதைக்க வேண்டி வருமா என்று அப்பாவியாக அவள் கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.
மகா வித்தியாலயத்தில்  இருந்து நான் இட மாற்றம் பெற்ற பொது அதை ரத்து செய்ய முடியதா என்று ஒரு மகளை போல் அவள் வினவியது இன்னும் மனதை நெருடுகிறது .

வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு மாதம் முன்னர் எதோ செமினார் என்று வந்த பொது கூட என்னை கண்ட போது சிரிப்புடன் ஓடி வந்து அளவளாவி அவளின் நன்றி விசுவாசத்தை கூறியது இன்னும் என்னுள் எதிர் ஒலிக்கிறது .

இறப்பு பொதுவானது . ஆனால் இவளின் இறப்பு கொடுரம் அந்த அப்பாவி பிஞ்சுக்கு பொருத்தம் இல்லாதது .

எப்போதும் தலை வலிக்கிறது கண் குத்துது என்று அடிக்கடி கண்ணீர் விடும் அவள் இறுதி நேரத்தில் என்ன அவஸ்தை பட்டிருப்பாள்.. கடவுளே .....

இறுதி சடங்கில் நாம் மழை இல் தோய்ந்த படி சென்றது நல்லதே.. எமது கண்ணீர் வெளி இல் தெரியக் கூடாது... போய் வா மகளே .......
« PREV
NEXT »

No comments