Latest News

May 22, 2015

சவுதி மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 30 பேர் பலி? (வீடியோ இணைப்பு)
by admin - 0

கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இரண்டாம் இணைப்பு:

சவுதி மசூதியில் நிகழ்ந்துள்ள மனித வெடிகுண்டு தாக்குதலை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தற்போது வரை 30 பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் அரசிற்கு ஆதரவாக சவுதி அரேபிய அரசு அங்குள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம்  ‘ஏமன் நாட்டின் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் சவுதி அரேபியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்’ என மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin




முதல் இணைப்பு:
சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது,சற்று முன்னர் பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை கிடைத்த தகவலின்படி 30 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மசூதியில் 150 பேர் தொழுகையில் இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments